என்னைப் பற்றி...

Blog Archive

Monday, July 16, 2018

ஊர்க்குருவியின் கவிதைகள் ...


நீர்த்துபோகும் வார்த்தைகள்
புளித்து  போகும்  உணர்வுகள்
மழுங்கிபோகும்  மலிந்த  ரசனைகள் ...
இதன்  மத்தியில்  என்  கவிதை  வரிகள் ...
புகைந்து  போகும்  ஊதுபத்தி ...
கவிதைகளை எழுதி  முடிதிருக்கையில்
வெறும்  சாம்பலாய் மிஞ்சிவிடுகிறது ... பீனிக்ஸ்  பறவையை மீதமாய்  விட்டு  விட்டு ...

எழுதி  எழுதி  நான் பிரசவித்த  பின்
அவற்றை  அறிவியல்  கூடமாக்கி ஆராயும் 
வாசிப்பவனின்   உணர்வுகளில்
என்  வார்த்தைகள்  சிதைந்து  
உருமாரிப்போகின்றன
இதில்  மறுபிறப்பு  கொடுத்ததாய்   அவனின்  பெருமிதம் ...
அதற்கு  மேலும்  நீண்டுவிடும்  அவனின்  சிலாகிப்பு
கொஞ்சம்  கொஞ்சமாய்  என்னை  அவமானப்படுத்துகிறது 
சூடு  கண்ட  பூனை  வெற்று பாத்திரத்தை  உருட்டி அலைகிறது  
என் கவிதை  அறைகளில் ...

இத்தனைகுமான  பிண்ணனியில்
தொடரும்  என்  கவிதைகள்
பாரந்த  வெளியில்  கூவித்திரியும்  ஊர்க்குருவியாய்
நிறைந்து  வழிகிறது ..
வெட்ட  வெளிக்கு  பழகியவன்  காதுகளுக்கு
அவை  தப்பி  போகின்றன ..

No comments:

Post a Comment