என்னைப் பற்றி...

Blog Archive

Wednesday, November 3, 2010

அழைக்க அழைக்க முகம் திருப்பி போகிறது ஒற்றை மழை.
மழையினூடே ...
ஓய்ந்து  ஒதுங்கும் ஒற்றைக் குருவி -
ஒரேயொரு பெருமூச்சு
சில்லென்று குளிர்ந்துவிடுகிறது பறவையின் சிறகுகள்.
ஒடுங்கிய சிறகுகளின் வழி சொட்டும்
ஒற்றைத்  துளியின்  நுனியில்
பறவையின் வெப்பமூச்சு நாசி விடைத்து வீழ்கிறது.
மீண்டும்... மீண்டும்...  அழைக்கிறேன்.
தவறும் துளிகள் வழியே.... மீண்டும் அழைத்துப் பார்க்கிறேன்.
கொஞ்சமும் திரும்பாமல்
ஒற்றை தண்டவாளம்  வழி போகிறது ஒற்றை மழை -
சிந்தும் குளிரில்
விலா  முட்டும் மூச்சின் ஓரமாய்
தடம் மட்டுமே மிச்சமாய் மிஞ்சுகிறது.
முகம் கசிந்து திரும்புகிறேன் - 
தொலைவில் பறவை  பறந்து போகிறது 
எச்சமாய்  தடம் கூட எஞ்சவில்லை.

No comments:

Post a Comment