நினைவுக்குள் மழை....
உணர்வு முடிச்சுகள் சில ஈரம் காய்த்து பிசுபிசுப்பாய்
அவிழ்ந்து என் உள்ளடைகளில் ஈரமாகின்றன.
ஈரத்தின் நசனசப்பில் அடிவயிற்றின் சலனமாய்
மழையின் அடர்த்தியில் கசிந்து ஒழுகிய வண்ணம்
அவ்வுணர்வின் நினைவுகள் தன்னிறைவாய் இருள் அப்பிக் கொள்கின்றன.
அருகில் ...என்னவளின் மார்பில் வழியும் பாலை
அரைத்தூக்கத்தில் சப்பி உறிஞ்சும் என் குழந்தையின் முனகல்
உறங்கும் அவள் தாய்மையின் நினைவாழத்தில் எதிரொலித்து திரும்புகிறது.
இதில் எனக்கும் அவளுக்குமான உணர்வுகளில் விழும் ஒரு துளி மழை
பெருமழை உறவாய் நினைவு தப்பி பீறிடுகின்றன.
மெல்லக் கடக்கும் இரவின்...
ஆழ்ந்த நித்திரையில் சிதறிவிடும் நினைவு ஒழுக்கங்கள்
கருக்கலில் ...
என் படுக்கையறை சன்னல் வழி மழையென
கலைந்த ஆடைகளை இழுத்து போர்த்தி சரிசெய்துகொள்கின்றன.
இவ்வாறு
...பெருகும் நினைவுகளின் மழைகளில்
நானும் என் விரைய வேக்காடுகளும்
நித்தியதிற்கான நிதர்சனத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்துபோகிறோம்.
No comments:
Post a Comment