மழையே!
சிந்தும் உன் உணர்வுத் துளிகளில் கசிகிறது... மிச்சமான என் உணர்வு முடிச்சுகள்!
முற்றத்தின் சன்னலில் தெறிக்கும் உன் சாரல் துளிகளில்
நனைந்து போகிறது
சில உறவுகளும் உணர்வுகளும்...
என் மனைவியில் தொலைந்த என் காதலின்
ஒரு துளி உற்சவமாய் உன் துளிகளின் புழுக்கம்
அவள் தாய்மையில்
இதுவரை இல்லாத குழந்தையாய் மீண்டும்
நான் பிறந்த ஒரு துளி நொடியாய் உன் சாரல் உருக்கம்..
சிதறும் உன் துளிகளில்
என் வாழ்கையின் பெருமூச்சு பூக்கள் பூத்து போகின்றன.
ஜில்லென்ற உன் சாரல் நெருக்கத்தில்
என்னவளோடு உறங்கும் என் குழந்தையின் உதட்டில் துளிர்த்து வழியும் ஒருத் துளி பால் வழிந்தோடுகிறது.
No comments:
Post a Comment