பரந்து திரண்ட கறுப்பின் உச்ச வெளி -
இருட்டு பூச்சிகளின் சத்தங்களால் நிறைந்து பிதுங்குகிறது.
அடர்த்தி இருள் திணித்து நீண்டுகிடக்கும் ஒற்றுச்சாலை,
முகத்தில் சுளீரென்று அப்பி வழியும் சாரல்,
வழியும் துளிகளில் ஊரும் தவிப்பு,
தவிப்பின் வழி ஊர்ந்து செல்லும் சில்லென்ற நடுக்கம் - என
இவைகளின் ஊடாய் என்னைப் படர்ந்து செல்கிறது ஒரு பெருமழை.
... ... செல்லும் மழையின் மர்ம உறுப்புக்கள் என்னை வன்புணர்ந்து செல்கின்றன.
செயலிழந்து கிடக்கும் என் உறுப்பு வழி
முட்டிக்கொண்டு வரும் சிறுநீரை அடக்கி
கொஞ்சம் கொஞ்சமாய் உணர்வுகளை பிரசவிக்கிறேன்.
என் பிரசவ வலியின் உச்ச சப்தம் கறுப்பு வெளியின் இருளில் கரைந்துபோகிறது.
No comments:
Post a Comment