என்னைப் பற்றி...

Blog Archive

Wednesday, November 3, 2010

என் மழைத்துளிகளை மெல்ல உன் பாதங்களுக்கடியில்
விரவிவிடுகிறேன்.
கவனமாய் மெல்ல உன் அந்தரங்க கால்பதித்து நடந்து வா!
மிதித்துவிடாதே!
மெல்ல மெல்ல உன் கால் பாதங்களில் என் மழை நிறைவதை பார்!
உணர்...
என் உணர்ச்சிக் குளிர்தலை உணர்ந்துகொள்!
சில்லிடும் உடல் வழி ...
நெஞ்சின் உள்மூச்சுவரை உள்ளிழுத்து சூழ்கொள்!

அதோ அங்கே ...
உன் பெருவிரல்களின் நுனிகளில் கோர்த்துகொள்ளும்
துளிகளின்  கணம் உன் என் காமங்களின் கணம்
அதுவே உனக்கும் எனக்குமான காதலின் தொடக்கம்.
காமமே காதலின் தொடக்கம்!
ஒரு துளி  காமத்தின் பெருக்கமே காதலின் பெருமழை!

மழை துளிகளில் பதியும் உன் பாத அழுத்தம் உன் காதலின் நெருக்கம்.
காமம் கொள்
காதல் கொள்
முற்றிலுமாய் உணர்ந்து போ
இழந்து போ
மீண்டும் மீட்டுகொள்
செத்து போ
மீண்டும் உயிர்த்தெழு
மாறி மாறி ......தொடர்ந்துகொள்!

No comments:

Post a Comment