எல்லாவற்றையும் அலட்சியம் செய்யும்
அவள் உணர்வுகளில் உசலாடுகிறது
எந்தன் மழை துளிகள்.
உசாலாடும் துளிகளில் ஒன்றிரண்டை
உதிர்ந்துவிடும் முன்
உசாலாடும் துளிகளில் ஒன்றிரண்டை
உதிர்ந்துவிடும் முன்
மெல்லப் பிரித்து கோர்த்து முடிகிறாள் தன்
இறுக்கமான உணர்வு நரம்புகளில்.
துளிகள் ஒவ்வொன்றும்
கணங்கள் கடக்க கனமேறுகின்றன.
என் மழை துளிகளின் கணம்
இன்றுபோல் என்றும் இருந்ததில்லை.
தவறி விழுந்துவிட எத்தனிக்கும் நிலையில்
தவறி விழுந்துவிட எத்தனிக்கும் நிலையில்
நிரம்பி நிற்கின்றன மழைத்துளிகள்
இன்னும் ஒரு துளி தேங்கினால்
தாங்காது …. இருந்தும் நீள்கிறது அவளின் இறுக்கமான கோர்ப்பு !